சவுளுப்பட்டியில் கொடியேற்று விழா

தர்மபுரி: தர்மபுரி சவுளுப்பட்டி நேரு நகரில் உள்ள ஆதிநாயகி சமேத ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில், திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, நேற்று கோயிலில் கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து முதற்கால ஏகாதச ருத்ரபாராயண ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (24ம்தேதி) காலை 9 மணிக்கு 2ம்கால ஹோமமும், மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. நாளை (25ம்தேதி) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் ஊஞ்சல் விழா நடக்கிறது.

The post சவுளுப்பட்டியில் கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Related Stories: