பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் பதவியேற்கிறார்

லாகூர்: பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி அரசு அமைய உள்ளது. நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலுடன் நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பிஎம்எல்-என் கட்சி 137 இடங்களை கைப்பபற்றி மெஜாரிட்டியுடன் உள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வர் பதவிக்கு ஷெரீப்பின் மகள் மரியத்தை அக்கட்சி நியமித்துள்ளது. பஞ்சாப்பின் முதல் பெண் முதல்வராக அவர் விரைவில் பதவியேற்க உள்ளார்.

The post பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் பதவியேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: