எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்: திமுக தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு தருவதாக, ஆண்டுக்கு 10 லட்சம் பேர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு 50 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்திருப்பது 28,000 பேர்தான். மற்றது எல்லாம் கருணை அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி, சீருடைப் பணியாளர்கள் எல்லாம் சேர்த்து. ஆகவே, அந்தத் தகவல் என்பது சரியான தகவலாக இல்லை.
* 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த திமுக எம்எல்ஏ கோரிக்கை
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காஞ்சிபுரம் எழிலரசன்(திமுக) பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.294 வரை ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லியிருக்கிறார். இன்னும் 6 ரூபாய் சேர்த்து ரூ.300 வழங்கிவிட்டால், 300 ரூபாய் வழங்கிவிட்டோம் என்று அந்த இலக்கை அடைந்த மாநிலமாய் தமிழகம் அமைந்துவிடும் என்பதற்காகவே நான் இந்த கோரிக்கையை வைக்கிறேன். குடிமராமத்து தொடர்பாக முதல்வர், 5 ஆயிரம் நீர்நிலைகள் கிராமப்புறங்களில் இருக்கக்கூடியதை கிராமப்புற மக்களைக் கொண்டே அங்கேயே நாங்கள் நிர்வகிப்போம், செய்து காட்டுவோம் என்று சொல்லியிருக்கிறார்.
The post ஒன்றிய அரசின் அறிக்கையே தெரிவித்துள்ளது 12 லட்சம் இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு: ஆர்.பி.உதயகுமாருக்கு, அமைச்சர் சி.வி.கணேசன் பதில் appeared first on Dinakaran.