நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக இந்த ஆணையம் நிறுவப்படுகிறது. இந்த ஆணையத்திற்கு ஒரு தலைவர், 3 முழு நேர உறுப்பினர்கள், 3 பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பார்கள். உறுப்பினர்கள் 62 வயதுவரை பணியாற்றலாம். நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயர்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம். தனியாருடன் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று பேரவையில் நிறைவேற்றப்படும்.
The post இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போல் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம்: மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.