திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: ஈஸ்வரப்பன் பேச்சு

பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ஆற்காடு தொகுதி ஈஸ்வரப்பன்(திமுக) பேசியதாவது: தாய்மார்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக மகளிர் உரிமைத்தொகை, முதியோருக்கு உதவித் தொகையை முதல்வர் உயர்த்தினார். மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டம், ஆதர வற்றோருக்கு தாயுமானவர் திட்டம், மக்களின் சுகாதாரத்தைக் காத்திட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்கிறது திராவிட மாடல் ஆட்சி. இதைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல, ஆன்மிகத்தை அரசியலுக்கும், சுயநலனுக்கும் பயன்படுத்துவோருக்கு எதிரான ஆட்சி என்று கூறினார். இவ்வாறு பேசினார்.

The post திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: ஈஸ்வரப்பன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: