பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 3,407 தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் களப்பணியாளர் சங்கம் கோரிக்கை

விருதுநகர்: பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 3,407 தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தொழில்நுட்ப களப்பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. விருதுநகர் பொதுப்பணித்துறை பொறியாளர் இல்லத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையின் தொழில்நுட்ப களப்பணியாளர் சங்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் பொதுப்பணித்துறையில் கடந்த 6.12.2019ல் வெளியிடப்பட்ட அரசாணையில், பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 3,407 தினக்கூலி பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். 10 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும்.ஆனால், 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றி வரும் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

The post பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 3,407 தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் களப்பணியாளர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: