ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு இரங்கல் தெரிவித்து ஜெர்மனியில் நடந்த பேரணி..!!

சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு ஜெர்மனி மக்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர். ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர்களில் முக்கியமானவர் அலெக்ஸி நவால்னி. இவரை பல்வேறு வழக்குகளில் கைது செய்திருந்த புதின் அரசு அவரை சிறையில் அடைத்தது. அவர் உடல்நல குறைவால் உயிரிழந்ததாக அண்மையில் ரஷ்ய அரசு அறிவித்தது. அதுமுதல் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் புதினுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலெக்ஸி நவால்னியை புதின் கொன்றுவிட்டதாக கூறி பெர்லினியில் மக்கள் பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.

The post ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு இரங்கல் தெரிவித்து ஜெர்மனியில் நடந்த பேரணி..!! appeared first on Dinakaran.

Related Stories: