ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.00 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில், டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர் ஆகியோரும் சென்றனர். 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் 22ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை திரும்புகிறார். தமிழ்நாடு சட்டசபையில் உரையை முழுமையாக படிக்காமல் பிரச்னை ஏற்பட்ட பின்பு, கோவை சென்ற ஆர்.என்.ரவி நேற்று முன்தினம்சென்னை திரும்பினார். டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.

 

The post ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Related Stories: