மிகப் பெரிய ஏரியையும் நீர் நிலைகளையும் கொண்ட பகுதி என்பதால் இங்கு ஏராளமான பறவைகள் எப்போதும் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக இரை தேடி இப்பகுதிக்கு வருகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி மே ஜூன் மாதம் வரை பறவைகள் இங்கு அதிகமாக காணப்படும். தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் வெளிநாட்டு பறவைகளான பிளமிங்கோ, பெலிகான் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வர தொடங்கியுள்ளன.
இதனால் பழவேற்காடு பகுதியில் எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேர் என வெண்ணிற ஆடை போற்றியது போல் பறவைகள் பறந்து திரிகிறது. இதனை காண்பதற்கு இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பறவை காய்ச்சல் பரவும் அச்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளதால் இந்த பறவைகளை கண்காணித்து நோய் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
The post பழவேற்காடு சுற்றுலா பகுதியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.