கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிடவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஏப்ரல் 15ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது வாதங்களை முன் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு! appeared first on Dinakaran.

Related Stories: