ரெட்டியார் சத்திரம் அருகே புதிய திட்டப் பணிகள் துவக்கம்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

 

ரெட்டியார்சத்திரம் பிப். 19: திண்டுக்கல்மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார். புதுச்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட நாலுபுளிகோட்டையில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம் கட்டிடம், புதுச்சத்திரத்தில் எஸ்சிபிஏஆர் நிதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டிடம் உள்ளிட்ட ரூ.2.40 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

விழாவில் திட்ட இயக்குனர் திலகவதி ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, மாவட்ட பொருளாளர் சத்யமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, நடராஜன், மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி, வெள்ளதாய் தங்கபாண்டி, ராதா தேவி சாமிநாதன், செல்வராணி ராமசாமி, சுந்தரி அன்பரசு, ஒன்றிய கவுன்சிலர்கள் விவேகானந்தர், மணிகண்டன், ஸ்ரீராமாபுரம் பேரூர் செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி காளியப்பன், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், உதவி செயற்பொறியாளர் காத்தவராயன், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ரெட்டியார் சத்திரம் அருகே புதிய திட்டப் பணிகள் துவக்கம்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: