போலீஸ் விரட்டியபோது கீழே விழுந்து 3 வாலிபர்களின் கைகள் முறிந்தன திருவண்ணாமலையில் பைக்கில் கத்தியுடன் சுற்றித்திரிந்தனர்

திருவண்ணாமலை, மே 16: திருவண்ணாமலையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர்களை பிடிக்க போலீசார் விரட்டியபோது கீழே விழுந்து 3 பேரின் கைகளும் முறிந்தன. அதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை பைபாஸ் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் அதிவேகமாக தப்பிச்செல்வது தெரிந்தது. உடனடியாக போலீசார் அவர்களை விரட்டினர். அப்போது. சாலையோரத்தில் பைக் கவிழ்ந்து 3 வாலிபர்களின் கை எலும்புகள் முறிந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 3 வாலிபர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த பன்ராஜ்(30), வேங்கிகால் பகுதியை சேர்ந்த பாலாஜி(24) மற்றும் நவீன்குமார்(25) என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தொடர்ந்து பொதுமக்களை மிரட்டி தகராறுகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, பன்ராஜ் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 பேரின் உடைந்த கைகளுக்கும் மாவு கட்டு போடப்பட்டது.

The post போலீஸ் விரட்டியபோது கீழே விழுந்து 3 வாலிபர்களின் கைகள் முறிந்தன திருவண்ணாமலையில் பைக்கில் கத்தியுடன் சுற்றித்திரிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: