இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வக்கீல் லோகநாதன், நகராட்சி ஆணையாளர் தாமோதரன், பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நந்தீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்காக பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். இதில் வார்டு கவுன்சிலர்கள் சதீஷ்குமார், திவ்யா சந்தோஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post நந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம்: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.