எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது; அதுதான் சட்டம், அதுதான் நியதி: அமைச்சர் துரைமுருகன்

ராணிப்பேட்டை: எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது; அதுதான் சட்டம், அதுதான் நியதி என ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசால் மேகதாது அணை கட்ட முடியாது எனவும் கர்நாடகா நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம், ஆனால் தமிழ்நாடு அனுமதியின்றி அணை கட்ட முடியாது எனவும் மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

The post எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது; அதுதான் சட்டம், அதுதான் நியதி: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Related Stories: