10 அம்ச கேரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் தொடர வேண்டும் என உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும். தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள சரண் விடுப்பு உள்ளிட்ட பண பலன்களை மீண்டும் வழங்கிட வழி வகை செய்ய வேண்டும். அரசாணை 243 திரும்ப பெற வேண்டும். அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பழைய நிலையிலேயே உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

The post 10 அம்ச கேரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: