சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் தனியார் நிறுவன பொறியாளர் பாலாஜி வீட்டில் 25 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. பாலாஜி வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பாலாஜி அளித்த புகாரை அடுத்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.