பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

 

மேட்டூர், பிப்.12: கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு, அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மாதேஸ்வரன் மலையிலிருந்து, நேற்று அதிகாலை, மேட்டூர் நோக்கி வரும் தமிழக அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக, கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், காரைக்காடு சோதனைச் சாவடியில் வந்த பஸ்சை நிறுத்தி, போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையைச் சேர்ந்த நாகேத்திரன் (35), ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சிவா (எ) கதிர் (25) ஆகியோர், கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

The post பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: