கேஷவ் மகராஜ் வீசிய 11வது ஓவரில், ஹெர்மன் 42 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), டாம் அபெல் 55 ரன் (34 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், கேப்டன் மார்க்ரம் – டிரைஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து அதிரடியாக விளையாட, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. மார்க்ரம் 42 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டப்ஸ் 56 ரன்னுடன் (30 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டர்பன் சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது. சன்ரைசர்ஸ் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய சூப்பர் ஜயன்ட்ஸ், 17 ஓவரில் 115 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. வியான் முல்டர் 38, பிரிடோரியஸ் 28, பிரீட்ஸ்கே 18, ஜூனியர் டாலா 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் மார்கோ யான்சென் 4 ஓவரில் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். டேனியல் வொர்ரல், ஓட்னீல் பார்ட்மேன் தலா 2, ஹார்மர் 1 விக்கெட் வீழ்த்தினர். 89 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி எஸ்ஏ20 கோப்பையை தக்கவைத்தது. சன்ரைசர்ஸ் வீரர் டாம் அபெல் ஆட்ட நாயகன் விருதும், சூப்பர் ஜயன்ட்ஸ் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
The post சன்ரைசர்ஸ் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன்: டர்பன்’ஸ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி எஸ்ஏ20 தொடரில் அசத்தல் appeared first on Dinakaran.