மதுரவாயலில் ரூ35 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம்: கணபதி எம்எல்ஏ திறந்து வைத்தார்


பூந்தமல்லி: மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட ஆலப்பாக்கத்தில் ₹35 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடத்தை கணபதி எம்எல்ஏ திறந்து வைத்தார். மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி 146வது வார்டான ஆலப்பாக்கத்தில் மறைந்த மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகம் வார்டு உறுப்பினர் நிதியிலிருந்து, ₹35 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி தலைமை தாங்கி, ₹35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வளசரவாக்கம் மண்டலக்குழுத் தலைவர் நொளம்பூர் ராஜன், திமுக பகுதி துணை செயலாளர் பாலாஜி, வட்ட செயலாளர் ரூபன், மாவட்ட துணை அமைப்பாளர் தினகரன், மாவட்டப் பிரதிநிதி சங்கர், அரசு துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மதுரவாயலில் ரூ35 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம்: கணபதி எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: