பின்னர், அங்கிருந்த அவரது மாமியார் சின்னத்தாயிக்கு சில்வர் டம்ளரில் டீ கொடுத்தார். சாதி வேறுபாடு காரணமாக எங்களுக்கு சிரட்டையில் டீ கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சின்னத்தாயி, தரணி ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
The post விவசாய நிலத்தில் வேலைபார்த்த பெண்களுக்கு சிரட்டையில் டீ: வீடியோ வைரலால் மாமியார், மருமகள் கைது appeared first on Dinakaran.