இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டியிட உள்ளது. புதிய நீதிக் கட்சி கடந்த 6 மாதமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் நான் போட்டியிட உள்ளேன். வேலூர் தொகுதியில் தாமரை மலர்ந்தே தீரும். ஏற்கனவே 15 வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்துக்காக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் என்னென்ன பலன் வந்தது என எடப்பாடி பழனிசாமிக்கு நெரியும். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் கூட்டணியில் மாற்றம் வரலாம்,”இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post பாஜகவால் அடைந்த பயன் எடப்பாடிக்கு தெரியும்… வேலூரில் தாமரை மலர்ந்தே தீரும் : புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி appeared first on Dinakaran.