இதனிடையே, ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது என்றும் பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார் என்று கூறினார். மேலும் ஜெயக்குமார் பதவி வெறி பிடித்தவர் அவரது கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை எனவும் கூறினார். இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது நிச்சயம் எங்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் தங்களிடம் பேச்சு நடத்தி வருகின்றன, விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும் என்றும் அவர் பேசினார்.
The post பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது; பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுள்ளார்: ஓ.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.