வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை தலைவராக பாஸ்போர்ட் அதிகாரி பதவி ஏற்பு

சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமாருக்கு, வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை செயலகத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, எஸ்.விஜயகுமார், வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை செயலகத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பை வகிப்பார். விஜயகுமார், நேற்று சென்னையில் உள்ள கிளைச் செயலகத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை தலைவராக பாஸ்போர்ட் அதிகாரி பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: