நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

டெல்லி: நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். 10 ஆண்டுகால மன்மோகன் சிங் அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. 2014ல் மோடி அரசு பதவியேற்றபோது இந்திய பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. வராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!! appeared first on Dinakaran.

Related Stories: