சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவிகள் 171 பேருக்கு கண் கண்ணாடி வழங்கல்

 

பெரம்பலூர்,பிப்.8: தமிழக அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 171 பேர்களுக்கு கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.தமிழக அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடை பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை அருட் சகோதரி பாஸ்கா நிகழ்ச் சிக்கு தலைமை வகித்தார். அம்மாப்பாளையம் வட்டார கண் மருத்துவக் குழுவினர் நடத்தியமுகாமில் மாணவி களுக்கு கண்கள் பரிசோதனை செய்யப் பட்டது. இதில் டாக்டர். செந்தில்நாதன் தலைமையில் கலந்து கொண்ட மருத்துவ குழு வினர், நடத்திய பரிசோத னையின் அடிப்படையில், கண் கண்ணாடி அணிவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 171 மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை இலவச மாக வழங்கப்பட்டது. இதில் கண்பயிற்சி ஆசிரியைகள் அமலி, மெர்லின் மற்றும் பள்ளி மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

The post சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவிகள் 171 பேருக்கு கண் கண்ணாடி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: