ஆக்கூர் பகுதியில் இன்று மின்தடை

 

செம்பனார்கோயில், பிப்.8: செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் ஆக்கூர், மணிகிராமம், திருவாலி ஆகிய மின்பாதைகளில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வலத்தான்பட்டினம், முடிகண்டநல்லூர், காளகஸ்தினாதபுரம், மடப்புரம், உமையாள்புரம், அபிஷேக்கட்டளை, அப்புராசபுத்தூர், ஆக்கூர், ஆக்கூர் முக்கூட்டு, ஆலங்காடு, ராதாநல்லூர், இளையமதுகுடம், செம்பதனிருப்பு, அல்லிவிளாகம் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு செம்பனார்கோயில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரக்காயர் தெரிவித்துள்ளார்.

The post ஆக்கூர் பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: