கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

 

புதுக்கோட்டை, பிப்.8: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமு மகன் திருமலை (21), இவர் பொன்னமராவதி அருகே உள்ள பூலாங்குறிச்சியில் உள்ள கல்லூரியில் படித்துள்ளார். அதே கல்லூரியில் படித்த அன்னவாசல் அருகில் உள்ள மருதாந்தலை கிராமத்தைச் சேர்ந்த காவியா ( 21) வும் நட்பாக பழகி பின்னர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் அவரைத் தேடி வந்த நிலையில் நேற்று கீரமங்கலம் போலிஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர். இது தொடர்பாக இருவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்த போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

The post கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: