மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்எல்ஏக்களும் தங்கள் அணிக்கே ஆதரவு தருவதாக அஜித்பவார் தரப்பினர் கூறினர். தேசியவாத காங்கிரஸ் கட்சிப் பெயரையும், சின்னத்தையும் தங்களிடம் ஒப்படைக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு செய்தனர். இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு என்ற அடிப்படையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயரும், அதன் கடிகார சின்னமும் அஜித்பவார் அணிக்கே உரியது என தீர்ப்பளித்தது. இதையடுத்து புதிய கட்சிப் பெயர் மற்றும் சின்னம் கோரி விண்ணப்பிக்குமாறு சரத்பவார் அணிக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து, சரத்பவார் தரப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்சந்திர பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்ராவ் பவார், என்சிபி – சரத்பவார் என்ற 3 பெயர்களையும், அதற்கான சின்னங்களையும் விருப்பத்தேர்வாக சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்சந்திர பவார் என்ற கட்சியின் பெயரையும், இதற்கு ஆலமரம் சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இதனிடையே, அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்தை ஒப்படைத்த தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக சரத்பவார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
The post ‘தேசியவாத காங்கிரஸ் – சரத்சந்திர பவார்’சரத்பவார் அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.
