அதையேற்று, நாராயணனின் மனைவி ராதாவின் சகோதரர்கள் கெம்பையா, சசி, முருகேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, தாய்மாமன் சீர்வரிசையுடன் நாராயணன் வீட்டுக்கு வந்தனர். இதையடுத்து, ஜூலியை குளிப்பாட்டி புடவை அணிவித்து, குங்குமம், சந்தனம், பொட்டு வைத்து மாலை அணிவித்தனர். பின்னர், வளைகாப்பு விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டார் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கினர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ஜூலியுடன் செல்பி எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.
The post சூளகிரி அருகே ருசிகரம்; வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய விவசாயி: சீர்வரிசையுடன் வந்த உறவினர்களுக்கு விருந்து appeared first on Dinakaran.