முன்னதாக சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அன்புமணி, “மகளிருக்கு வழங்குவதைப் போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவசப் பேருந்துகள் கொடுக்க வேண்டும்; பிறகு படிப்படியாக, வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவுப்படுத்த வேண்டும் அப்போதுதான் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள்.காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பேரிடர் ஏற்படுகிறது; தீர்வு காண வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் வெள்ளம் மட்டும் கிடையாது. வறட்சி, விவசாய பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். மரங்கள் அதிகம் நட வேண்டும். வருங்காலங்களில் உணவு தட்டுப்பாடு இருக்கக்கூடும். அடுத்த 5 ஆண்டுகளிலேயே இது வரக்கூடும். மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு 4,000 பேர் இறக்கும் சூழல் உள்ளது; இதனைத் தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மற்ற நாடுகளை போன்று தமிழ்நாட்டிலும் பசுமை பூங்காக்கள் நிறைய உருவாக்குங்கள்,” இவ்வாறு பேசினார்.
The post ஆண்களுக்கும் இலவசப் பேருந்து சேவை.. கூட்டணி தொடர்பான பா.ம.க. நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் : அன்புமணி appeared first on Dinakaran.