விருதுநகர் மத்திய மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

சிவகாசி, பிப்.7: சிவகாசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மத்திய மாவட்ட கழக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பயில்வான் சந்தோஷ்குமார் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனையின்படி செயல்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில கழக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் வட்ட வார்டு ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post விருதுநகர் மத்திய மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: