காணி பழங்குடி மகளிர் குழு, தற்போது இஞ்சி, மிளகு, முருங்கை ஆகியவற்றின் மணம் வீசக்கூடிய, தனித்துவமான மதிப்புக் கூட்டப்பட்ட தேன் விற்பனையை ஒரு சிறிய வாடிக்கையாளர் தளத்தின் மூலம் செய்துவருகிறது. மேலும், இணையதளத்தின் மூலம் இந்த தேன் விற்பனையை அதிகரித்திடவும் ஆவன செய்து வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் உதவியால், பழங்குடி இன மக்களிடம் இருந்து தேன், இஞ்சி, மிளகு முதலியவற்றின் கொள்முதலை அதிகரித்தும் விற்பனையைப் பெருக்கியும் ஒட்டுமொத்த பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காணி பழங்குடி மகளிர் குழு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றியுடன் போற்றி வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு அரசு சார்பில் காணி பழங்குடி மகளிர் குழுவுக்கு ரூ.25 லட்சம் புத்தொழில் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி appeared first on Dinakaran.