இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் பேசுகையில், ‘காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ சட்டமன்றத்தில் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என பேசியிருந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் நகர் புற வேலை திட்டத்தை தொடங்கி வைத்து செயல்படுத்தி தந்துள்ளார். இந்த திட்டத்திற்கு கருங்குழி பேரூராட்சியில் 40 லட்சம் நிதி ஒதுக்கீடு அரசு செய்துள்ளது. எனவே, 15 வார்டுகளிலும் சாலையோரங்களில் உள்ள புல் பூண்டுகளை அகற்றுவது, மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பது, குளங்கள் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்து இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களிடையே பேசினார். இந்நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கருங்குழி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை: பேரூராட்சி தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.