போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்ற ரவுடி கைது


சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகள் விற்ற ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரும்பாக்கத்தில் பிரபல ரவுடி கல்லறை ஜான் (30) மற்றும் கூட்டாளிகள் சாரதி, நாகராஜ், லோகேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2000 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கல்லறை ஜான் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட 15 வழக்குகள் உள்ளன.

The post போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்ற ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: