₹35 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், பிப்.6: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஆர்.கவுண்டம்பாளையம் விற்பனை மையத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இதில் ராசிபுரம், கவுண்டம்பாளையம், அத்தனூர், முத்துக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், வேலம்பாளையம், சிங்களாந்தபுரம், காக்காவேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து, 1438 மூட்டை பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். பருத்தியை ஏலம் எடுக்க அவினாசி, அன்னூர், சேலம், கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் ஆர்சிஹச் ரகம் 1385 மூட்டை, டிசி.ெஹச் ரகம்- 3மூட்டை, கொட்டு ரகம்- 50 மூட்டை கொண்டு வந்தனர். இதில் ஆர்சிஹெச் அதிகபட்சமாக குவிண்டால் ₹7401க்கும், குறைந்தபட்சமாக ₹6889க்கும், டிசிஹச் 10003க்கும், கொட்டு அதிக பட்சமாக ₹5295க்கும், குறைந்த பட்சம் ₹3595க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹35 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

The post ₹35 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: