தேர்தல் அலுவலக பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி, இணை பொறுப்பாளராக மாலா செல்வகுமார், காயத்ரி ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிகை தயாரிக்க பொறுப்பாளராக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, இணை பொறுப்பாளராக அஸ்வத்தாமன் ஆகியோர் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் சட்ட விவகாரம், தேர்தல் கமிஷனை சந்திக்கும் வகையில் பொறுப்பாளராக முன்னாள் டிஜிபி வி.பாலச்சந்தர், இணை பொறுப்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கால் சென்டர், அலுவலக நிர்வாகம், ஊடகத்துறை, டிஜிட்டல் துறை, கலாசார விளம்பரம், தெருக்கூட்டம், மகளிர், இளைஞர்கள், எஸ்சி, எஸ்டி ஆகிய பிரசாரக்குழுக்கள், பூத் பணி என மொத்தம் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
The post நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு, அறிக்கை தயாரிப்பு உள்பட 38 குழுக்கள் அமைப்பு: தமிழக பாஜ அறிவிப்பு appeared first on Dinakaran.