இந்நிலையில் கேரளாவில் யானைகள் மரணம் அடிக்கடி நிகழ்வது குறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மேனகா காந்தி அளித்த பேட்டியில், ‘கேரள மாநிலம் மானந்தவாடிக்கு வந்த யானையை, கேரள வனத்துறையினர் போதைப் பொருள் கொடுத்து பிடித்து கர்நாடக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். யானையை பிடிப்பதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. கேரள வனத்துறையினர் இரண்டு வாரங்களுக்கு ஒரு யானையை கொன்று வருகின்றனர்.
வனத்துறையின் அலட்சியமும், மிருகத்தனமும் தான் இதுபோன்ற யானை மரணங்களுக்கு காரணம். இவ்விவகாரத்தில் ஒரு அதிகாரியை கூட மாநில அரசு சஸ்பெண்ட் செய்யவில்லை. முன்பு கரடியும், புலியும் இதேபோல் கொல்லப்பட்டன. வனத்துறை அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிப்பதில்லை. தலைமை வனவிலங்கு காப்பாளர் ஜெய்பிரசாத் மற்றும் எச்.ஓ.டி. கங்கா சிங்கும் சரியாக பணியாற்றவில்லை’ என்றார்.
The post கேரள வனத்துறை அலட்சியத்தால் 2 வாரத்துக்கு ஒரு யானை சாகுது!: ஒன்றிய மாஜி அமைச்சர் கண்டனம் appeared first on Dinakaran.