குழந்தைகளுக்கான ஆதார் சிறப்பு முகாம்

தேவகோட்டை, பிப். 4: தேவகோட்டையில் உள்ள புனித ஜான் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கான இலவச ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை தேவகோட்டை நகர் மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் துவக்கி வைத்தார், இதில், பெரியவர்களுக்கு குறைந்த கட்டண சேவையில் பெயர் மற்றும் முகவரி திருத்தம், புகைப்படம் மற்றும் அலைபேசி எண் மாற்றம் செய்யப்பட்டது. ஐந்து வயது முதல் 15 வயது நிறைவு பெற்றவர்கள் மற்றும் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு கார்டு புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் பிப்.20ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் ரத்தினம் சரவணன், வடிவேல் முருகன், கோமதி பெரியகருப்பன், தனலட்சுமி நல்லுபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post குழந்தைகளுக்கான ஆதார் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: