ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர்கள் ஜெயச்சந்திரன், வித்யாவதி தலைமை தாங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் தமிழ்செல்வம், சம்சுதீன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சமீமா ரகீம், கீதா, கவுன்சிலர்கள் கோல்டு மணி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு, ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 219 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலை பள்ளி சேர்ந்த 233 மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
The post மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் appeared first on Dinakaran.