அப்படிப்பட்ட விதியை ரத்து செய்யவோ, மாற்றம் செய்யவோ கூடாது என எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட சட்டம் அது. அப்படிப்பட்ட விதியை காலில் போட்டு மிதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான். டம்மி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். சர்வாதிகாரத்தின் அடிப்படையில் ஒற்றை தலைமை என கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. பணபலத்தை கொண்டு அவர் தான், தான் பொது செயலாளர் என பேசிக்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பாஜ உடன் கூட்டணியில் இருக்கிறோம். பிரதமர் மோடியுடன் கூட்டணி தொடரும். கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்,’என்றார்.
The post எடப்பாடி ஒரு டம்மி பொதுச்செயலாளர்: ஓபிஎஸ் ஆவேசம் appeared first on Dinakaran.