தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் கடந்த 24-ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 9ம் தேதி திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் காங்கிரஸ் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, இந்திய கம்யூ. கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய கம்யூ. சார்பில் எம்.பி. சுப்பராயன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி பங்கேற்றுள்ளனர். 4 விருப்ப தொகுதியில் இருந்து 2 மக்களவை தொகுதிகள், ஒரு க மாநிலங்களவை சீட் கேட்க இந்திய கம்யூ. திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது; திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெற்றது. கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளை கேட்டுள்ளோம்; முதல்வர் தமிழ்நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினர்.
The post திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெற்றது: இந்திய கம்யூனிஸ்ட் குழு பேட்டி appeared first on Dinakaran.