நேற்று தன்னுடைய நெருங்கிய உறவினர்களுடன் திருவனந்தபுரத்திலுள்ள லாட்டரித் துறை அலுவலகத்திற்கு வந்து பரிசு விழுந்த டிக்கெட்டை ஒப்படைத்தார். பரிசு விழுந்த இந்த அதிர்ஷ்டசாலி சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கும் வந்தார். இங்கும் தரிசனத்தை முடித்த பின்னர் கோயிலுக்கு அருகிலுள்ள கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியுள்ளார். அந்த லாட்டரிக்குத் தான் தற்போது முதல் பரிசு ரூ.20 கோடி கிடைத்துள்ளது. ஒன்றிய, மாநில அரசு வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் போக இவருக்கு ரூ.12.60 கோடி கிடைக்கும்.
The post கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி புதுச்சேரி தொழிலதிபருக்கு ரூ.20 கோடி கிடைத்தது: சபரிமலை சென்று திரும்பும் வழியில் டிக்கெட் வாங்கினார் appeared first on Dinakaran.