பலத்த காயமடைந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்துபோன வசந்தா சென்னையில் வீட்டு வேலை செய்து வருவதாகவும், மேல்மருவத்தூரில் இருந்து ரயில் மூலம் சென்னை செல்ல தனது மகனுடன் சொந்த ஊரிலிருந்து மேல்மருவத்தூர் ரயில்நிலையம் வந்தபோது வழியில் விபத்தில் சிக்கி தாயும் மகனும் பலியானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மேல்மருவத்தூர் அருகே சோகம் பைக் மீது கார் மோதியதில் தாய், மகன் பரிதாப பலி appeared first on Dinakaran.