இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதன் பிறகு மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கள்ளக்குறிச்சி ஆபத்தான நிலையில் இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. விஷச் சாராயம் அருந்தியவர்களை கண்டறியும் பணியை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த 55 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
The post கள்ளக்குறிச்சி ஆபத்தான நிலையில் இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.