3 ஆண்டுகளில் ரூ.5,812.64 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள், கட்டிடங்கள் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்


சென்னை: 2021 முதல் 2024 மார்ச் வரை ரூ.5,812.64 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள், கட்டிடங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்த 17,450 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கோயில் பாதுகாப்பு பற்றி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதில் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

 

The post 3 ஆண்டுகளில் ரூ.5,812.64 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள், கட்டிடங்கள் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: