தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 18-ல் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஜன., பிப். மாதத்துக்கு 5.26 டிஎம்சி நீரை திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. டெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகா நிர்பந்தித்த நிலையில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.

The post தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: