விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு நாளொன்றுக்கு சராசரியாக 8000 மூட்டைகளுக்கு மேல் நெல் வரத்து இருப்பதால் சுமார் 20,000 நெல் மூட்டைகளுடன் 3 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இதனால் அங்கு உள்ள அனைத்து குடோன்களும் நிரம்பி, வெட்ட வெளியில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். வெயிலிலும், பனியிலும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல், மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
The post விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் 3நாளாக காத்துக் கிடக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.