அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தையொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு. எ.வ.வேலு, உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.மத வெறியர்களால் காந்தி கொல்லப்பட்ட நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவேன் என்னும் கருப்பொருளில் உறுதிமொழி ஏற்றனர்.

The post அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: