சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் எடத்தெரு  மாரியம்மன் கோயிலில் தை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு  வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் வள்ளார் தெரு எனப்படும் எடத்தெருவில் உள்ள  மாரியம்மன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் வல்லப விநாயகருக்கு தை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு 7 மணி அளவில் பால், தயிர், சந்தனம், இளநீர், பழ வகைகள், வாசனை திரவியங்கள் மற்றும் பூஜைப் பொருட்களுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து 8 மணி அளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், பழனியப்பன், ராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை பூசாரி குமார் நடத்தி வைத்தார்.

The post சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: