எடப்பாடியுடன் எஸ்டிபிஐ தலைவர் சந்திப்பு

சென்னை:அதிமுக பொது செயலாளர் எடப்பாடிபழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று சந்தித்து பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர் ஏ.கே.கரீம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத் ஆகியோர் உடனிருந்தனர்.  சந்திப்பின் போது மதுரையில், கடந்த ஜனவரி 7ம் தேதி நடைபெற்ற, மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

The post எடப்பாடியுடன் எஸ்டிபிஐ தலைவர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: